உத்திர ரங்கநாதர் கோயிலில் 3 நாள் பவித்ரோற்சவம் தொடங்கியது

பள்ளிகொண்டா, அக்.30: பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் 3 நாட்கள் நடைபெறும் பவித்ரோற்சவம் நேற்று தொடங்கியது.வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் புகழ்பெற்ற திருத்தலமான உத்திர ரங்கநாதர் கோயிலில் பவித்ரோற்சவ விழா நேற்று தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகிறது. பவித்ரோற்சவம் என்பது கோயிலின் தூய்மைக்காகவும், தோஷ பரிகாரங்களுக்காகவும் உலக நன்மைக்காகவும் சிறப்பு யாகசாலைகள் அமைத்து நடத்தப்படுகிறது.தொடர்ந்து மூன்று நாட்கள் கோயிலில் சிறப்பு யாக சாலைகள் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: