சென்னை: உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு அப்போலோ மருத்துவமனை சார்பில் நேற்று கருத்தரங்கு நடைபெற்றது. இதில், மெட்ரானிக் இந்தியவின் துணை தலைவர் மதன் கிருஷ்ணன், அப்போலோ மருத்துவமனைகள் குழும துணை தலைவர் ப்ரீதா ரெட்டி, சுனீதா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், அப்போலோ குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி கூறியதாவது: இந்தியாவில் சுமார் 1.8 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு சிகிச்சை அளிக்கும் வகையிலும், அதனை எளிதில் முன்கூட்டியே கண்டுபிடிக்கும் வகையிலும் இந்தியாவில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தளத்தை மெட்ரானிக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து அப்போலோ மருத்துவமனை அமைத்துள்ளது.