×

கன்டெய்னர் லாரி மோதி காவலாளி பரிதாப பலி

புழல்: சென்னை திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர்  ஜான் (58). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் தாம்பரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, டு வீலரில்   புழல் சைக்கிள் ஷாப் மேம்பாலம் நாகாத்தம்மன் கோயில் அருகே மாலையில்  வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கன்டெய்னர் டு வீலர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த    ஜான் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

 இதுகுறித்து, தகவலறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து ஜானின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  இதனையடுத்து, கன்டெய்னர் லாரி டிரைவர் லால்குடியைச் சேர்ந்த மகேந்திரனை (60) கைது செய்து  விசாரித்து வருகின்றனர்.

Tags : guard ,
× RELATED சென்னை பெரம்பூர் பகுதியில் தலைமைக்...