வள்ளியூர், அக். 29: கலந்தபனை காருண்யாபுரத்தில் ரூ.14.58 லட்சத்தில் மெட்டல் சாலை அமைக்கும் பணியை ஞானதிரவியம் எம்பி துவக்கி வைத்தார். வள்ளியூர் ஒன்றியம் கலந்தபனையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.14.58 லட்சம் மதிப்பீட்டில் காருண்யாபுரத்தில் மெட்டல் சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான துவக்க விழாவிற்கு ஞானதிரவியம் எம்பி தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திமுக பிரமுகர் செண்பகவள்ளி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் எரிக்ஜூடு, கடம்பன்குளம் கிளை செயளாளர் ராஜகோபால், கலந்தபனை கிளை செயலாளர் நீலமேகம், தெற்குவள்ளியூர் பஞ். முன்னாள் தலைவர் இன்பம், தங்கபாண்டி, பிரின்ஸ், சுரேஷ்குமார், பூபதிராஜன், ராமகிருஷ்ணன், தினகர், ஒப்பந்ததாரர் இருக்கன்துறை முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்,