×

சிவந்திபுரத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பேரணி

வி.கே.புரம், அக். 29:   அம்பை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவந்திபுரம் ஊராட்சி மற்றும் அம்பை தீயணைப்பு துறையும் இணைந்து சிவந்திபுரத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தின. தீயணைப்பு துறை அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் வேலு முன்னிலை வகித்தார். பேரணி, பஞ். அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு மெயின் ரோடு வழியாக சென்று மீண்டும் பஞ். அலுவலகத்தை சென்றடைந்தது. பேரணியில் பங்கேற்றவர்கள், முக கவசம் அணிவதின் முக்கியத்துவம் மற்றும் கொரோனா விழிப்புணர்வு  வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். மேலும் கொரோனா விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் சிவந்திபுரம் விஏஓ குருகுலராமன், சுகாதார மேஸ்திரி பெல்பின், பில்கலெக்டர்முத்துக்குட்டி, ஊராட்சி மகளிர் குழு பொறுப்பாளர் அமுதா மற்றும் ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Corona ,prevention awareness rally ,Sivanthipuram ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...