×

மணியாச்சியில் குடிநீர் திட்டப்பணி சண்முகையா எம்எல்ஏ துவக்கிவைத்தார்

ஓட்டப்பிடாரம், அக். 29: மணியாச்சியில் ஜே.ஜே.எம் திட்டத்தின் கீழ் ரூ. 28 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வீடுகளுக்கான குடிநீர் திட்டப் பணிகளை சண்முகையா எம்எல்ஏ துவக்கிவைத்தார்.   ஓட்டபிடாரம் தொகுதிக்கு உட்பட்ட மணியாச்சி கிராமத்தில் மத்திய அரசின் அனைத்து வீடுகளுக்கும்  குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளை துவக்கிவைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஓட்டப்பிடாரம் யூனியன்  சேர்மன் ரமேஷ் தலைமை வைத்தார். யூனியன் ஆணையாளர் ஹெலன் பொன்மணி, பிடிஓ வளர்மதி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சண்முகையா எம்.எல்.ஏ., திட்டப்பணிகளை கொடியசைத்துத் துவக்கிவைத்தார்.

 இதில்  மணியாச்சி இன்ஸ்பெக்டர் பட்டாணி, ஒன்றிய பொறியாளர் ரவி, பணி மேற்பார்வையாளர் சங்கர், ஒன்றிய கவுன்சிலர்கள் நவநீதகிருஷ்ணன், கனகரத்தினம் சுகுமார், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் முத்துப்பாண்டி, மணியாச்சி ஊராட்சி தலைவர் முருகன் மற்றும் ஊர் மக்கள் பங்கேற்றனர்.

Tags : Shanmugaiya MLA ,Maniyachi ,
× RELATED வாஞ்சி மணியாச்சி முதல் தட்டப்பாறை...