உடுமலை, அக். 29: போக்குவரத்துக் குளறுபடியால் உடுமலை நகரில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு போக்குவரத்து போலீசார் இல்லாததால் வாகனங்கள் தாறுமாறாக சென்றுவருகின்றன. உடுமலை சாலையில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் ஒருபுறம் பழனி நோக்கி செல்லும் வாகனங்களும், மறுபுறம் பொள்ளாச்சி நோக்கி செல்லும் வாகனங்களும் பயன்படுத்த வேண்டும். ஆனால் இருபுறமும் ஒரே நேரத்தில் வாகனங்கள் இருவழியையும் பயன்படுத்துகின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் விபத்துகளும் நடக்கின்றன.மெயின் ரோட்டில் வாகன நெரிசல் ஏற்படுவதால், கல்பனா ரோடு, வ உ சி வீதியிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நிற்கின்றன. பேருந்து நிலையத்தில் இருந்து, தேசிய நெடுஞ்சாலையை தாண்டி மறுபுறம் செல்ல முடியாத நிலை உள்ளது.