பொள்ளாச்சி, அக்.29: பொள்ளாச்சியில் உள்ள பல தோட்டங்களில், வெளியூர் வியாபாரிகள் ரூ.22க்கு இளநீர் கொள்முதல் செய்வதாக விவசாயிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக இளநீர் அதிகளவில் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக மழை இல்லாததால், அந்த நேரத்தில் இளநீர் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்றது.
இந்த மாதம் துவக்கத்தில் இருந்து சுற்று வட்டார கிராமங்களில் இளநீர் அறுவடை பணி அதிகமாக நடந்து வருகிறது. இளநீர் உற்பத்தி அதிகரிப்பாலும், அவை வெளியிடங்களுக்கு அதிகளவு ஏற்றுமதியாவதாலும் கடந்தாண்டை கணக்கிடும்போது இந்தாண்டில் இளநீர் விலை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.