×

வருசநாடு பகுதியில் முருங்கை பீன்ஸ் பயிரிடும் பணி தீவிரம்

வருசநாடு, அக். 28: வருசநாடு பகுதியில் முருங்கை பீன்ஸ் பயிரிடும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வருசநாடு பகுதியில் வைகை நகர், தர்மராஜபுரம், பசுமலைதேரி, சிங்கராஜபுரம், செல்வராஜபுரம், கோவிலாங்குளம், தங்கம்மாள்புரம், வாய்க்கால் பாறை, உள்ளிட்ட பகுதிகளில் முருங்கை பீன்ஸ் பயிரிடும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். கடந்த சில வாரங்களாக வருசநாடு அதனைச் சுற்றியுள்ள பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. எனவே, தற்சமயம் முருங்கை பீன்ஸ் விவசாயத்திற்கு உகந்ததாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். கடமலைக்குண்டு தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகள், ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று விவசாயிகளுக்கு பயிர்களின் தன்மை குறித்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர். பூச்சி மருந்து, உரம் போன்றவைகள் மானிய விலையில் வழங்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : area ,Varusanadu ,
× RELATED வாட்டி வதைக்கும்...