×

விருதுநகர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவராக உசிலை செல்வம் தேர்வு

சிவகாசி, அக். 28: விருதுநகர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகளை தேர்வு செய்யும் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவராக சிவகாசி பள்ளபட்டி ஊராட்சி தலைவரும், சிவகாசி ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவருமான உசிலை செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவைத்தலைவராக திருச்சுழி ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு செயலாளர் ஜெயமுருகன், செயலாளராக ஸ்ரீவி, ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் சதீஸ்குமார், பொருளாளராக காரியாபட்டி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் வேங்கைமார்பன், ஒருங்கிணைப்பாளராக நரிக்குடி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், துணை தலைவர்களாக ராஜபாளையம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் முத்துச்சாமி, வெம்பக்கோட்டை ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் தங்கவேல், நரிக்குடி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் முத்துமாரி காளீஸ்வரன், துணை செயலாளராக சிவகாசி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு பொருளாளர் ராஜமுனியாண்டி, செயற்குழு உறுப்பினர்களாக கோமதி சங்கர், காளீஸ்வரி உள்ளிட்ட 22 பேர் தேந்தெடுக்கப்பட்டனர். தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் அரசை முனியாண்டிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : Usilai Selvam ,President ,Panchayat Council ,Virudhunagar District ,
× RELATED தனியார் தொழிற்சாலை மேற்பார்வையாளரை...