×

மருதுபாண்டியர்கள் நினைவு தினம் அனுசரிப்பு

சாத்தூர், அக். 28: மருதுபாண்டியர்கள் 219வது நினைவு தினம் காரியாபட்டியில் அனுசரிக்கப்பட்டது. பஸ்ஸ்டாண்ட் அருகில் மருதுபாண்டியர்கள் படத்திற்கு திருச்சுழி எம்எல்ஏ தங்கம் தென்னரசு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முக்குலத்தோர் உறவின்முறை தலைவர் அய்யாவுத்தேவர், துணை தலைவர் மருதுபாண்டி, ஒன்றிய செயலாளர் செல்வம், மாவட்ட கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், பேரூர் செயலாளர் செந்தில், யூனியன் வைஸ்சேர்மன் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்திராஜ், முருகன் தலைமையில் அஞ்சலி செலுத்தினர். சாத்தூர் அண்ணாநகரில் தமாகா சார்பில் அனுசரிக்கப்பட்டது. நகர தலைவர் அய்யப்பன் தலைமை வகிக்க, மாவட்ட துணைதலைவர் பாண்டியன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து மருது பாண்டியர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் ஏழை, எளிய பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன.

Tags : Maruthupandiyar Memorial Day ,
× RELATED மருதுபாண்டியர் நினைவு நாளுக்கு...