×

பணிகளை செய்யவிடாமல் முட்டுக்கட்டை ஊராட்சி தலைவர் கணவரை கண்டித்து தர்ணா ராஜபாளையம் அருகே பரபரப்பு

ராஜபாளையம், அக். 28: ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லங்கொண்டான் ஊராட்சி மன்ற தலைவியாக உமாதேவி, துணை தலைவியாக ராணி ஆகியோர் உள்ளனர். இதில் உமாதேவியின் கணவர் வனராஜ் ஆதிக்கம் செலுத்தி, தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 4, 5வது வார்டுகளின் உறுப்பினர்களை அவமரியாதை செய்ததாக கூறப்படுகிறது. மேலு்ம் அவர்கள் பகுதிகளுக்கு வளர்ச்சி திட்ட பணிகளை செய்ய விடாமல் முட்டுக்கட்டை போடுவதாக கூறி 5, 6வது வார்டு உறுப்பினர்களான ராணி, கனிசெல்வம் நேற்று ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு வெளியே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : riot ,Tarna Rajapalayam ,panchayat leader ,
× RELATED வம்பு சண்டைக்கு போறதில்ல; வந்த சண்டையை...