கிருஷ்ணகிரி, அக்.28: தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில், முதுகு தண்டுவட நரம்பு பாதிப்பு ஏற்பட்டு, இரு கால்களும் செயலிழந்து இருசக்கர நாற்காலியை பயன்படுத்தும் நபர்களுக்கு, 6 மாதத்திற்கு தேவையான 12 வகையான மருந்து பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வருடத்திற்கு இருமுறை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி 59 நபர்களுக்கு தலா ₹25 ஆயிரம் வீதம் மொத்தம் ₹14 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான 12 வகையான மருந்து பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் பரமசிவன், மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.