×

மது விற்ற 2பேர் கைது

சாத்தான்குளம், அக்.28: தட்டார்மடம் பகுதியில் சட்டவிரோதமாக மதுவை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்.ஐக்கள் ஐயப்பன், முத்துச்சாமி ரோந்து பணியில் ஈடுப்பட்டபோது இடைச்சிவிளை சோதனை சாவடி அருகில் மதுவிற்றதாக செட்டியாபத்தைச் சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் சத்தியமூர்த்தி (37) என்பவரை கைது செய்து 10 மது பாட்டில் மற்றும் ரூ.250 பறிமுதல் செய்தனர். இதேபோல் காந்திநகர் விலக்கில் மது விற்றதாக பொத்தகாலன்விளை சோனியாநகரைச் சேர்ந்த அந்தோணி ராசையா மகன் மாரிதுரையை (47) கைது செய்து 10 மது பாட்டில் மற்றும் 210 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு