×

கிளினிக் நடத்திய போலி பெண் டாக்டர் கைது காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில்

வேலூர், அக். 28: காட்பாடி பிரம்மபுரத்தில் கிளினிக் நடத்திய போலி பெண் டாக்டர் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் திருவள்ளுவர் தெருவில் போலி டாக்டர் ஒருவர் கிளினிக் வைத்து சிகிச்சை அளிப்பதாக தாசில்தாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் தாசில்தார் பாலமுருகன், மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர் செந்தாமரைக்கண்ணன், வருவாய்த்துறையினர் மற்றும் திருவலம் போலீசார் நேற்று காலை சம்பந்தப்பட்ட தெருவுக்கு சென்று திடீரென ஆய்வு செய்தனர். அப்போது அங்கு விஜயகுமாரி(50) என்பவர், கிளினிக் வைத்துக்கொண்டு சிகிச்சை அளிப்பது தெரிய வந்தது. ேஹாமியோபதி படித்துள்ள அவர் அலோபதி மருத்துவம் பார்த்துள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில் விஜயகுமாரியை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த மருந்து, மாத்திரை, ஊசி உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த கிளினிக்கிற்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். கைது செய்யப்பட்ட விஜயகுமாரி, சில மாதங்களுக்கு முன்பு போலி கிளினிக் நடத்தியதாக ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : doctor ,clinic ,Katpadi ,
× RELATED பூசணி விதையின் பயன்கள்!