திருச்சி, அக்.28: திருச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடையின் வாயிலாக பெரிய வெங்காயம் கிலோ ரூ.45க்கு விற்பனை செய்வதை அமைச்சர்கள் துவங்கி வைத்தனர். திருச்சி கே.கே.நகர் சுந்தர் நகரில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறிக் கடையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.45க்கு விற்பனை தொடக்க விழா நேற்று நடந்தது. திருச்சி கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார். சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் துவங்கி வைத்தனர். அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசுகையில், ‘திருச்சி மாவட்டத்தில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.45க்கு விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது.