காந்திமார்க்கெட் கடந்த 7 மாதங்களாக பூட்டியே கிடக்கிது. கொரோனா பொதுமுடக்கத்தை தொடர்ந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை திறக்கப்பட்ட பின்னும் காந்தி மார்க்கெட் திறக்கப்படாமல் உள்ளது. மூடியே கிடக்கும் இந்த மார்க்கெட்டில் கடைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. நாள்தோறும் ஏதாவது ஒரு கடையை உடைத்து பொருட்களையும், பணத்தையும் திருடிச் செல்வது வாடிக்கையாக உள்ளது. உரிய பாதுகாப்பு இல்லை. கடைகள் பூட்டியிருந்தாலும் கடை வாடகையை மாநகராட்சிக்கு வியாபாரிகள் செலுத்தி வருகின்றனர். பாலக்கரையை சேர்ந்தவர் காஜாமொய்தீன் (67). இவர் கடந்த 50 ஆண்டுகளாக காந்தி மார்க்கெட்டில் பிரியாணி அரிசி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடையை கடந்த 2 நாட்களுக்கு முன் உடைத்து, கடையிலிருந்த மூட்டை தைக்கும் இயந்திரம், தராசு மற்றும் கல்லாவிலிருந்த பணத்தை (மொத்தம் ரூ.50 ஆயிரம் மதிப்பு) திருடிச் சென்றுள்ளனர். செலவாகும் என்பதால் அவர் போலீசுக்கும் செல்லவில்லை. கொரோனா பொது முடக்கத்தால் ஏற்கனவே முடங்கி போயிருக்கும் வியாபாரிகளுக்கு இதுமேலும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.