×

திருவாரூர்: அரசு டாக்டர் உள்பட 40 பேருக்கு கொரோனா

திருவாரூர், அக்.28: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று அரசு பயிற்சி டாக்டர் ஒருவர் உட்பட புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் வரையில் 9 ஆயிரத்து 447பேர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 23 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் உட்பட திருவாரூரில் 6 பேர், மன்னார்குடியில் 7 பேர், நன்னிலத்தில் 6 பேர், குடவாசலில் 3 பேர் உட்பட மொத்தம் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 487 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Thiruvarur ,Corona ,government doctor ,
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்