பாபநாசம், அக். 29: அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றின் கரையில் சப்இன்ஸ்பெக்டர் அருண்ராஜ் உள்ளிட்ட போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை தடுத்து சோதனை நடத்தியதில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து மணல் வண்டியை பறிமுதல் செய்தனர். இதேபோல் சப் இன்ஸ்பெக்டர் ரத்தினசாமி உள்ளிட்ட போலீசார், மதகடி பஜாரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அனுமதியின்றி மணல் அள்ளி வந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.