×

காரைக்காலில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3,393ஆக உயர்வு

காரைக்கால், அக்.28: காரைக்காலில் நேற்று மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 3,393 ஆக உயர்ந்துள்ளது. நாடு எங்கும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், காரைக்கால் மாவட்டத்திலும் கடந்த சில வாரங்களாக கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வந்தது. இதுவரை 36,500 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில், காரைக்காலில் நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்று 3,383 ஆவும், பலி எண்ணிக்கை 61ஆகவும் இருந்தது. தற்போது இதன் தாக்கம் குறைந்து வருகிறது. கடந்த 26ம் தேதி நூற்றுக்கு மேற்பட்டோருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது. இதில், மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 3,393 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3097 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் 235 பேர் அரசு பொது மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சையில் உள்ளனர்.

Tags : Karaikal ,
× RELATED விழிப்புணர்வு வாசகத்துடன் பால்...