×

வெங்கமேட்டில் எல்லோரும் நம்முடன் இயக்கம் ஆன்லைன் மூலம் 200 பேர் திமுகவில் சேர்ந்தனர்

கரூர், அக். 28: கரூர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெங்கமேடு பகுதியை சேர்ந்த 200 நபர்கள் எல்லோரும் நம்முடன் முகாம் மூலம் திமுகவில் இணைந்தனர். கரூர் மாவட்டம் முழுவதும் எல்லோரும் நம்முடன் என்ற திட்டத்தின்படி, ஏராளமானோர் திமுகவில் இணையவழியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் கரூர் வெங்கமேடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் வடக்கு நகர பகுதியை சேர்ந்த 200 நபர்கள் இணையவழியில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வில், மாநில விவசாய அணிச் செயலாளர் சின்னசாமி, வடக்கு நகர செயலாளர் கணேசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சக்திவேல், நகர பொறுப்பு குழு உறுப்பினர் செந்தில், சரவணன், பிரபாகரன், 6வது வார்டு செயலாளர் பாலசுப்ரமணியன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...