×

கடமலை- மயிலை ஒன்றிய கூட்டம்

வருசநாடு, அக். 23: கடமலை- மயிலை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் சந்திரா தலைமை வகிக்க, ஆணையாளர் திருப்பதிவாசகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வரவு- செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. பின்னர் வளர்ச்சி பணிகள் குறித்து பேசினர். தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் அனைவரும் ஒன்றுகூடி எங்களுடைய அனைத்து கோரிக்கைகளுக்கும் முறையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பின்னர் கவுன்சிலர் ஆயுதவள்ளி பேசுகையில், ‘வருஷநாடு கிராமத்தில் சாக்கடை கழிவுகளால் பெருமாள்கோவில்தெரு முதல் மூல வைகை ஆற்றுப்பகுதி மிகவும் பாதிப்படைவதாக கூறினார். மேலும் இதேபோல் கவுன்சிலர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது தொடர்ந்து தலைவர், அனைத்து கோரிக்கைகளும் முறையான நிதி ஒதுக்கீடு செய்து வளர்ச்சி பணிகள் நடைபெறும் என தெரிவித்தார்.

Tags : Katamalai- Peacock Union Meeting ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு