மானாமதுரை, அக்.23: மானாமதுரை சைல்டு லைன் துணை மையம், மனிதம் அறக்கட்டளை இணைந்து குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை, உடலளவில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் போன்ற விஷயங்கள் குறித்து சைல்டு லைன் துணை மையம் இயக்குநர் வனராஜன் கூறினர். முத்தனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் சுடர்மதி, கிராம செவிலியர்கள் மற்றும் சைல்டு லைன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ் நன்றி கூறினார்.