நத்தம், அக். 23: நத்தம் அருகே பிள்ளையார்நத்தம் ஊராட்சி, மாதவநாயக்கன்பட்டியில் எம்எல்ஏ நிதியில் கட்டப்பட்ட திறந்தவெளி கலையரங்கம் திறப்பு விழா நேற்று நடந்தது. ஆண்டிஅம்பலம் எம்எல்ஏ தலைமை வகிக்க, திமுக மாநில செயற்குழு உறுப்பினரும், சாணார்பட்டி தெற்கு மாவட்ட கவுன்சிலருமான விஜயன், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் பழனிச்சாமி, பேரூர் செயலாளர் முத்துக்குமாரசாமி, ஒன்றிய குழு தலைவர் பழனியம்மாள் சுந்தரம், தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜன் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி கலையரங்கை திறந்து வைத்து பேசுகையில், ‘மத்திய அரசிடமிருந்து நத்தம் ஒன்றியத்தில் பள்ளி சுற்றுச்சுவர், சிமெண்ட் சாலை, வண்ணக்கல் பதித்தல், தடுப்பணை கட்டுதல் போன்ற பணிகள் எம்ஜிஎன்ஆர் இஜிஎஸ் திட்டத்தின் கீழ் ரூ.11 கோடி நிதி பெறப்பட்டு நடைபெற்று வருகிறது. இப்பணிகளின் ஆய்வுக்கு அதிகாரிகள் வந்து ஒத்துழைப்பு தரவில்லை.