திருவெறும்பூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை

திருவெறும்பூர், அக.23: திருவெறும்பூர் அருகே குடும்ப பிரச்னை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான்கோட்டையை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி யோகராணி(36). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. மேலும் சேகருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், இதனால் அடிக்கடி தம்பதிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு யோகராணி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துவாக்குடி போலீசார் யோகராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: