விஜயதசமி சிறப்பு வழிபாடு 100 விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பெட்டிகள் வழங்கல்

பாபநாசம், அக். 23: அம்மாப்பேட்டையில் அட்மா திட்டத்தின்கீழ் 100 விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பெட்டிகள் வழங்கப்பட்டது. பாபநாசம் அருகே அம்மாப்பேட்டையில் அட்மா திட்டத்தின்கீழ் 100 விவசாயிகளுக்கு மகசூலை அதிகரிக்கும் வகையில் தேனீ வளர்ப்பு பெட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அம்மாப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் சுஜாதா பங்கேற்று பேசுகையில், தோப்பு, தோட்டங்களில் தேனீ பெட்டி வைக்கப்பட்டால் அவை மூலம் அயல் மகரந்த சேர்க்கை நடந்து மகசூல் அதிகரிக்கும். எனவே விவசாயிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பெட்டியை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும். வேளாண்மையின் தேவதையான தேனீக்களுக்கு அருகில் பூச்சி மருந்து அடிப்பதோ, புகைமூட்டம் போடுவதோ கூடாது. குளவி, அரணை போன்றவற்றிடமிருந்து தேனீக்களை பாதுகாக்க வேண்டும் என்றார்.

Related Stories: