வனத்துறையிடம் ஒப்படைப்பு அனுமதியின்றி மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

பேராவூரணி, அக். 23: பேராவூரணியில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. பேராவூரணி பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தென்னங்குடி கிராமத்தில் தாசில்தார் ஜெயலட்சுமி ஆய்வு செய்தார். அப்போது பழையநகரம் பகுதியில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து பேராவூரணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

Related Stories: