×

மாயனூர் கதவணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் பாதியில் நிற்கும் பால பணி

கரூர், அக். 23: தண்ணீர் வரத்து காரணமாக வாய்க்கால் பாலப் பணி பாதியில் நிற்கிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாயனூர் அருகே கதவணைக்கு அனைத்து வாகனங்களும் எளிதில் செல்லும் வகையில் சில வாரங்களுக்கு முன்பு வாய்க்கால் பாலம் கட்டும் பணி நடைபெற்றது. தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து காரணமாக அணுகு சாலை இணைப்பு பணிகள் மட்டும் பாதியில் நிற்கிறது. இதன் காரணமாக, அனைத்து வாகன ஓட்டிகளும் ஏற்கனவே உள்ள பாலத்தின் வழியாக சென்று வருகின்றனர். எனவே தண்ணீர் வரத்து குறைந்ததும் இந்த வாய்க்கால் பாலத்தின் அணுகுசாலை பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : Mayanur Gate ,
× RELATED மாயனூர் கதவணையில் தேங்கியிருக்கும்...