நாமக்கல், அக்.22: காவல்துறையில் பணியின் போது, உயிர்நீத்த காவலர்களை நினைவு கூறும் வகையில், நேற்று நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீர வணக்கநாள் அனுசரிக்கப்பட்டது. இதில், மாவட்ட கலெக்டர் மெகராஜ், எஸ்பி சக்தி கணேசன் ஆகியோர், உயிர் தியாகம் செய்த போலீசாருக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதில் போலீஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.