புதுவையில் மேலும் 3 பேர் பலி புதிதாக 175 பேருக்கு கொரோனா

புதுச்சேரி, அக். 22:  புதுவையில் நேற்று புதிதாக 175 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

 இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கூறுகையில், புதுச்சேரியில் நேற்று 4,033 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுவை-138, காரைக்கால்-21, ஏனாம்-8, மாகே-8 என மொத்தம் 175 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், பூமியான்பேட்டை ஜவகர் நகரை சேர்ந்த 73 வயது முதியவர், காரைக்கால் டிஆர் பட்டினத்தை சேர்ந்த 54 வயது ஆண், மாகேவை சேர்ந்த 78 வயது மூதாட்டி என 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 580 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.73 சதவீதமாக உள்ளது.

 புதுவை மாநிலத்தில் இதுவரை 33,622 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 29,016 பேர் (86.30 சதவீதம்) குணமடைந்துள்ளனர். குறிப்பாக நேற்று 242 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,026 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 2,74,238 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 2,37,011 பரிசோதனைகள் நெகட்டிவ் என்று முடிவு வந்துள்ளது,

என்றார்.

Related Stories: