×

முக்கூடலில் தசரா விழா முருகன் அலங்காரத்தில் முத்துமாலையம்மன்

பாப்பாக்குடி, அக். 22:  முக்கூடல் இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட முத்துமாலை அம்மன் கோயிலில் தசரா விழா நடந்து வருகிறது. இக்கோயிலில் கடந்த 17ம் தேதி முதல் தசரா திருவிழா துவங்கியது. தினந்தோறும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. நான்காம் நாள் விழா முக்கூடல் நாடார் இளைஞர் இயக்கம் சார்பாக நடந்தது. இதில் முத்துமாலை அம்பாள், முருகப்பெருமான் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை இந்து நாடார் சமுதாய தலைவர் சொக்கலால் தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Tags : Murugan ,Muthumalayamman ,trio ,Dasara ,festival ,
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...