வி.கே.புரம், அக்.22:வி.கே.புரம் மேலக்கொட்டாரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செல்லப்பா(64). இவர் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணன் கோயில் வாய்க்கால் அருகேயுள்ள ஓடையில் தவறி விழுந்து பலியானார். இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வி.கே.புரம் எஸ்ஐ மணிகண்டன் உடலை கைப்பற்றி அம்பை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார். இதுபோல் பாபநாசம் பழைய ரோடு உள்ள தெப்பக்குளம் அருகே சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.