×

வீட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது

சிவகாசி, அக்.22:  வெம்பக்கோட்டையில் வீட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது செய்யப்பட்டார். வெம்பக்கோட்டை தாலுகா கிராம பகுதியில் வீடுகளில் சிலர் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுகிறது. போலீசார் வீடுகளில் பட்டாசு தயாரிப்போரை கண்காணித்து கைது செய்து வருகின்றனர். நேற்று வெம்பக்கோட்டை தாலுகா தாயில்பட்டி லெட்சுமி நகரில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சண்முகக்கனி(45) என்பவர் வீட்டில் சோர்சா வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். வெம்பக்கோட்டை எஸ்ஐ சதீஸ்குமார் அவரை கைது செய்தார். அவரிடம் இருந்து 25 கிலோ சோர்சா வெடிகளை பறிமுதல் செய்தார்.

Tags : Home firecracker maker ,
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...