×

பண்ணைப்புரத்தில் உழவர் திருநாள் விழா

தேவாரம், அக்.22: பண்ணைப்புரத்தில் உழவர் திருநாள் கொண்டாடப்பட்டது. பண்ணைப்புரத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் மற்றும் கே.எம்.எம்.ஆர்.பெட்ரோல் விற்பனை நிலையம் இணைந்து உழவர் திருநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உத்தமபாளையம் வட்டார காங்கிரஸ் தலைவர் மைதீன்அப்துல்காதர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பாரத் பெட்ரோலிய விற்பனை மேலாளர் சாய்தர், லூப்ரிகேன்ட் ஆயில் மேலாளர் பிரவீன், டெரிடரி சேல்ஸ் மேனேஜர் குல்தீப் ஆகியோர் கலந்து கொண்டனர். உழவர்திருநாள் ஆயிலை கோம்பை கண்ணன் பெற்று கொண்டார். நிகழ்ச்சியில் கே.எம்.எம்.ஆர்.மேலாளர் மல்லிகா, டிராக்டர் மெக்கானிக் ரஞ்சித், ராஜாராம், எல்.ஐ.சி ஆலோசகர் சையதுஇப்ராகீம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Farmer's Day Festival ,farm ,
× RELATED அதிமுக ஆதரவாளருக்கு சொந்தமான...