×

மருதுபாண்டியர் நினைவு நாளுக்கு செல்பவர்கள் நாளைக்குள் அனுமதி பெற வேண்டும்

சிவகங்கை, அக்.22: மருதுபாண்டியர் நினைவு நாளுக்கு அவர்களது நினைவிடங்களில் மரியாதை செலுத்த வருபவர்கள் நாளைக்குள் முன் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:தி ருப்பத்தூரில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 219வது நினைவு தின விழா 24.10.2020 மற்றும் காளையார்கோவிலில் 27.10.2020 அன்று நினைவு நாள் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களின் நலன் கருதி அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்களை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

நினைவு நிகழ்ச்சிகளில் மரியாதை செலுத்த வரும் அரசியல் கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள்(5நபர்களுக்கு மிகாமல்) எஸ்பி மற்றும் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்களிடம் வாகனத்திற்கான முன் அனுமதி பெற்று அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி உரிய சமூக இடைவெளியை கடைபிடித்து மரியாதை செலுத்த அனுமதிக்கப்படும். அனுமதி பெற விரும்புவோர் நாளைக்குள் எஸ்பி மற்றும் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்களிடம் முன் அனுமதி பெற வேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு வந்து செல்ல வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Maruthupandiyar Memorial Day ,
× RELATED மருதுபாண்டியர்கள் நினைவு தினம் அனுசரிப்பு