×

ஆடு திருடியவர்கள் கைது

திருப்பரங்குன்றம், அக்.22: நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள கீழமாத்தூர் வலையதெருவை சேர்ந்தவர் கருப்பணன்(60). இவர் ஆடுகளை வைத்து தொழில் செய்து வருகிறார். அவற்றைது வீட்டின் அருகே உள்ள பட்டியில் அடைத்துள்ளார். மறுநாள் காலை போய் பார்த்த போது  6 ஆடுகளை காணவில்லை. இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசில் கருப்பணன் புகார் செய்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆடுகளை திருடிச் சென்ற கீழமாத்தூர் புல்லூத்து பகுதியை சேர்ந்த மகாமுனி மகன் பாலமுருகன்,முருகேசன் மகன் பாலமுருகனை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 ஆடுகள் மற்றும் ஆடு திருட பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Tags : Goat thieves ,
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...