மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் காவலர் குடியிருப்பிற்கு சென்று பணியின்போது இறந்த எஸ்ஐ ராமநாதனின் இல்லத்திற்கு சென்று அவரது படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை கமிஷனர்கள் பவன்குமார் ரெட்டி, வேதரத்தினம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை கமாண்டர் தளவாய், மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் ராமச்சந்திரன், கன்டோன்மென்ட் உதவி கமிஷனர் மணிகண்டன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.