×

6 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை திருச்சி, புதுகை மாவட்டத்தில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும் தொழிலாளர் உதவி ஆணையர் அறிவுறுத்தல்

திருச்சி, அக்.22: திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தங்கராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் தொழிலாளர் துறையில் கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 17 தொழிலாளர் நலவாரியங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. வாரியங்களில் உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்களுக்கு திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களையும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் அனைவரும் www.tnuwwb.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து பயனடைய வேண்டும். தகுதி வாய்ந்த தொழிலாளர்களுக்கு பதிவு எண் விவரம் செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ்சாக அனுப்பி வைக்கப்படும். மேலும் ஏற்கனவே உறுப்பினராக உள்ள மற்ற தொழிலாளர்களும் உறுப்பினர் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Trichy ,gang ,Assistant Commissioner ,Labor ,Budugai ,
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்