×

கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

மன்னார்குடி, அக்.22: மன்னார்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடை பெற்றது. மன்னார்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் சார்பில் கொரோனா வைரஸ் தோற்று தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னதாக மன்னார்குடி தீயணைப்பு நிலையத்தில் இருந்து துவங்கிய பேரணியை நிலைய அலுவலர்கள் பாலசுப்ரமணியன், மானெக்சா (போக்குவரத்து) ஆகியோர் துவக்கி வைத்தனர். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ராஜகோபாலசுவாமி கோயில் அருகே நிறைவடைந்தது. இதில் திரளான தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை வாசகங்கள் அச்சிட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்து பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

வலங்கைமான்: தீயணைப்பு துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் மாவட்ட அலுவலர் அனுசுயா உத்தரவின்படி குடவாசல் தீயணைப்பு மீட்புப் பணி நிலையம் சார்பில் கொரொனா விழிப்புணர்வு பேரணி நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. பேரணியில் நிலைய அலுவலர் (போக்குவரத்து) திருநாவுக்கரசு முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் கொரோனா விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோசம் எழுப்பியபடி சென்றனர். அப்போது பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரம், முகக் கவசம் சனிடைசர், வழங்கப்பட்டது. முன்னதாக பேரணி முக்கம் பிள்ளையார் கோயிலில் இருந்து புறப்பட்டு கடைவீதி, பேருந்து நிலையம், பாரத வங்கி வழியாக, ஓகை வரை சென்று ஊர்வலம் நிறைவு பெற்றது.

Tags : Corona virus prevention awareness rally ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு