தஞ்சை, அக். 22: நீத்தார் நினைவு தினத்தையொட்டி தஞ்சையில் நாட்டுக்காக உயிர்நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் எஸ்பி தேஷ்முக் சஞ்சய் சேகர் 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சிவஞானம், கலெக்டர் கோவிந்தராவ் பங்கேற்று மலர் அஞ்சலி செலுத்தினர். மேலும் உயிர்தியாகம் செய்த காவலர்களின் குடும்பத்தினரை எஸ்பி தேஷ்முக் சஞ்சய் சேகர் சந்தித்து கவுரவப்படுத்தினார். தொடர்ந்து காவல் பணியின்போது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த மாவட்டம் முழுவதும் உள்ள காவலர்களின் இல்லங்களுக்கு எஸ்பி உத்தரவின்பேரில் காவல் உயரதிகாரிகள் நேரில் சென்று அவர்களின் உருவப்படத்திற்கு வீரவணக்கம் செலுத்தினர்.