×

சொந்த உபயோகத்திற்காக சாராயம் காய்ச்சிய தந்தை, மகன் கைது

க.பரமத்தி, அக்.22: க.பரமத்தி அடுத்த குப்பம் ஊராட்சிக்குட்பட்ட தலையீத்துப்பட்டி பகுதியில் ஒருவர் வீட்டில் தனது உபயோகத்திற்காக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக க.பரமத்தி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.அதன்படி, இன்ஸ்பெக்டர் ரமாதேவி, எஸ்ஐக்கள் ராஜேந்திரன், தர்மலிங்கம் ஆகியோர் கொண்ட போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.இதில் குப்பம் ஊராட்சிக்குட்பட்ட தலையீத்துப்பட்டி பகுதியில் முத்துசாமி மகன் ராமசாமி(எ)காளியப்பன்(49),இவரது மகன் கணேஷ்(23) வீட்டில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், 3லிட்டர் சாராயம் காய்ச்சி உபயோகத்திற்காக வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்த வழக்கு பதிந்து தந்தை , மகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு