×

மர்மநபர்களுக்கு வலை புன்னம்பசுபதிபாளையம் அருகே அனுமந்தராயபெருமாள் கோயிலில் சிறப்புவழிபாடு

க.பரமத்தி, அக்.22: புன்னம்பசுபதிபாளையம் அருகே அனுமந்தராய பெருமாள் கோயிலில் மூலம் நட்சத்திரத்தையொட்டி சிறப்பு அபிஷேக. வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். க.பரமத்தி ஒன்றியம் புன்னம் ஊராட்சியில் குட்டக்கடையில் இருந்து புன்னம் செல்லும் தார்சாலையில் அனுமந்தராய பெருமாள் (ஆஞ்சநேயர்) கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வாரத்தில் சனிக்கிழமை தோறும் பூஜையும் சிறப்பு நாட்களில் பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய நாட்களான அமாவாசை, பவுர்ணமி, மூலம் நட்சத்திரம் ஆகிய நாட்களில் பக்தர்கள் ஆஞ்சநேயரை பயபக்தியுடன் வணங்கி வருகின்றனர்.இக்கோயிலில் நேற்று மூலம் நட்சத்திரத்தையொட்டி பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அனுமந்தராயசாமிக்கு, வெண்ணை சாத்து, துளசி மாலை, வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டு அனுமந்தராயசாமி (ஆஞ்சநேயர்) சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags : Anumantharayaperumal Temple ,Web Punnambasupathipalayam ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு