×

கொரோனாவுக்கு 2 பேர் பலி; இறந்தோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு

கிருஷ்ணகிரி, அக்.21: கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த 32 வயது ஆண் காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் காரணமாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கடந்த 16ம் தேதி அனுமதிக்கப்பட்டா நிலையில, அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று முன்தினம் இறந்தார்.  கிருஷ் ணகிரி பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண் கொரோ னா பாதிப்பால் கடந்த 16ம் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி கடந்த 18ம் தேதி இரவு இறந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 95ஆக உயர்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று மட்டும் கொரோனாவுக்கு 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 87 பேர் சிகிச்சையில் குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்கள். இதுவரை 6 ஆயிரத்து 139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 ஆயிரத்து 311 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 733 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

Tags :
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்