கே.வி.குப்பம் அக்.21: குடியாத்தம் ஆர்எஸ் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார்(23). இவர் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் காவலராக உள்ளார். கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி இரவு கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பம் மலையடிவாரத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சசிகுமார் உள்ளிட்ட 3 போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கிருந்த மர்ம நபர்கள் சசிகுமாரை தாக்கிவிட்டு தப்பியோடினர். இதில் காயமடைந்த சசிகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.