×

காவலர் பணியில் சேர வாய்ப்பு


ராமநாதபுரம், அக்.21:  இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் வீரராகவ ராவ் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால், இரண்டாம் நிலை காவலர் இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் இணையதள வாயிலாக வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களில் முன்னாள் படைவீரர்களுக்கு 5 சதவீதம் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 45-வயதிற்குள் உள்ள மற்றும் படையிலிருந்து விடுவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குள் உள்ள (17.9.2017-க்கு பின்னர் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும்) முன்னாள் படைவீரர்கள் இந்த பணியிடங்களுக்கு “www.tnusrbonline.org” என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 26.10.2020. மேலும் எந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டியது குறித்த முழு விவரங்களை இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ள, அறிவிப்பினை கண்டு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : police force ,
× RELATED ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்...