கைதான இயேசு சபை குருவை விடுவிக்க கோரி கிறிஸ்தவ அமைப்பு ஆர்ப்பாட்டம்

திருச்சி, அக். 21: ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்காக பாடுபட்டு கைதான இயேசு சபை குருவை விடுவிக்க கோரி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இயேசு சபையின் குரு ஸ்டோன்சுவாமி(83). திருச்சியைச் சேர்ந்த இவர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக, தலித் மற்றும் மலைவாழ் பழங்குடியின ஆதிவாசி மக்களின் உரிமைக்காக பாடுபட்டு வருகிறார். இவரை கடந்த அக்.8ம் தேதி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து, மும்பை தலேஜா சிறையில் அடைத்தனர். பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட குருவை உடனே விடுதலை செய்ய வேண்டும் என கூறி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே நேற்று கிறிஸ்தவ மக்கள் களம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிறிஸ்டி கிருபாகர் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ முபாரக்அலி, மமக மொய்தீன் உள்பட ஏராளமான கிறிஸ்தவ அமைப்பினர் கலந்துகொண்டனர்.

Related Stories: