குளம் போல் தேங்கிய மழைநீர் 4 வயது குழந்தையுடன் சுற்றிய பெண் மீட்பு

தஞ்சை, அக். 21: தஞ்சை மணிமண்டபம் அருகே நேற்று முன்தினம் மாலை பெண் ஒருவர் 4 வயது குழந்தையுடன் சந்தேகப்படுமாறு சுற்றி கொண்டிருந்தார். இதை பார்த்த அப்பகுதிவாசிகள், மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பெண்ணை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் புதுக்கோட்டை பொன்நகரை சேர்ந்த அபிநயா (29) என்பதும், வீட்டில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்து கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரது கணவர் அருணாச்சலத்துக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மகளிர் காவல் நிலையத்துக்கு அருணாச்சலம் மற்றும் அவரது உறவினர்கள் வந்தனர். பின்னர் போலீசார், இருவருக்கும் குடும்ப ஆலோசனை வழங்கினர். இதையடுத்து அபிநயா தனது 4 வயது குழந்தை மற்றும் கணவருடன் புதுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Related Stories: