பட்டுக்கோட்டையில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்

பட்டுக்கோட்டை, அக். 21: பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்துறை சார்பில் பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் செய்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று மணிக்கூண்டு மற்றும் பேருந்து நிலைய பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு கொரோனா குறித்தும், பொதுமக்களிடம் பரவாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறை குறித்தும் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். மேலும் துண்டு பிரசுரங்கள் மற்றும் முககவசங்களை வழங்கினர். முன்னதாக மணிக்கூண்டு பகுதியில் தீயணைப்புத்துறை, போக்குவரத்து காவல்த்துறை சார்பில் பட்டுக்கோட்டை போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் மற்றும் போக்குவரத்து பிரிவு காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் இணைந்து கொரோனா ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

Related Stories: