திருப்பூர், அக்.21: திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் குழியால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருப்பூர், கொங்கு மெயின் ரோடு பிரதான சாலைகளில் ஒன்றாக உள்ளது. இந்த வழியாக வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். மேலும், கொங்கு மெயின் ரோட்டில் ஏராளமான குடியிருப்புகள், மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை உள்ளது. இந்நிலையில், நேற்று பகல் 12 மணியளவில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே சாலையில் திடீரென பெரிய குழி ஏற்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் குழி இருக்கும் பகுதியை சுற்றி தடுப்பு வைத்து மறைத்தனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.