புதுச்சேரி, அக். 20: புதுவையில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 108 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமார் கூறுகையில், புதுச்சேரியில் நேற்று 2,533 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுவை- 95, காரைக்கால்- 8, ஏனாம்- 4, மாகே- 1 என மொத்தம் 108 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், காந்தி திருநல்லூரை சேர்ந்த 58 வயது பெண் தொற்றால் உயிரிழந்தார். காரைக்கால், மாகே, ஏனாமில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 575 ஆக அதிகரித்துள்ளது.